கூடாவொழுக்கம்
275பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்..

எத்தகைய   செயல்  புரிந்துவிட்டோம்  என்று தமக்குத் தாமே வருந்த
வேண்டிய    துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி,  உலகை
ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.