கூடாவொழுக்கம்
279கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்.

நேராகத் தோன்றும் அம்பு,  கொலைச்   செயல்    புரியும். வளைந்து
தோன்றும்    யாழ்,   இசை  இன்பம் பயக்கும். அது போலவே மக்களின்
பண்புகளையும்   அவர்களது   செயலால்    மட்டுமே உணர்ந்து கொள்ள
வேண்டும்.