கூடாவொழுக்கம்
280மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின்.

உலகத்தாரின்  பழிப்புக்கு  உள்ளாகும்  செயல்களைத் துறக்காமல் ஒரு
துறவி,   தனது   தலையை    மொட்டையடித்துக்   கொண்டோ, சடாமுடி
வளர்த்துக்    கொண்டோ   கோலத்தை  மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு
ஏமாற்று வித்தையே ஆகும்.