வெகுளாமை
301செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கா லென்.

தன்  சினம்  பலிதமாகுமிடத்தில்  சினம்  கொள்ளாமல்  இருப்பவனே
சினங்காப்பவன்;   பலிக்காத   இடத்தில்  சினத்தைக்    காத்தால் என்ன?
காக்காவிட்டால் என்ன?