இன்னா செய்யாமை
311சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப்  பெறக்   கூடுமென்றாலும்
அதன் பொருட்டுப் பிறருக்குக் கேடு  செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின்
கொள்கையாகும்.