குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கொல்லாமை
329
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர்
உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.