அவா அறுத்தல்
361அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

ஆசையை,   எல்லா  உயிர்களிடமும்,  எல்லாக் காலத்திலும் தவறாமல்
தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.