இறைமாட்சி
383தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்று
நீங்கா நிலனாள் பவற்கு.

காலம்  தாழ்த்தாத  விரைவான   நடவடிக்கைகளும், அறிவுடைமையும்,
துணிவும்   நாடாளுகின்றவர்களுக்குத்   தேவையானவையும்,    நீங்காமல்
நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.