அறன்வலியுறுத்தல்.
39அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில.

தூய்மையான   நெஞ்சுடன்  நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற
புகழால்  ஏற்படுவதே   இன்பமாகும். அதற்கு மாறான வழியில்   வருவது
புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.