இறைமாட்சி
390கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு
முடையானாம் வேந்தர்க் கொளி.

நலவாழ்வுக்கு  வேண்டியவற்றை  வழங்கியும், நிலை யுணர்ந்து கருணை
காட்டியும், நடுநிலை தவறாமல்  ஆட்சி  நடத்தியும்,  மக்களைப்  பேணிக்
காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.