குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கேள்வி
412
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும்.
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு
வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.