குறள் முதற்குறிப்பு அகரவரிசை
காலமறிதல்
484
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
கருதி யிடத்தாற் செயின்.
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால்
உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.