இல்வாழ்க்கை
50வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும்.

தெய்வத்துக்கென  எத்தனையோ   அருங்குணங்கள்  கூறப்படுகின்றன.
உலகில்   வாழ  வேண்டிய  அறநெறியில்  நின்று  வாழ்கிறவன்  வானில்
வாழ்வதாகச்   சொல்லப்படும்   தெய்வத்துக்கு    இணையாக    வைத்து
மதிக்கப்படுவான்.