தெரிந்து தெளிதல்
508தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.

ஆராய்ந்து   பார்க்காமல்    ஒருவரைத்  துணையாகத் தேர்வு செய்து,
அமர்த்திக்கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத
துன்பம் விளையும்.