பொச்சாவாமை
538புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையு மில்.

புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச்  செய்திடல்  வேண்டும். அப்படிச்
செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.