செங்கோன்மை
541ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் குவதே முறை.

குற்றம்    இன்னதென்று   ஆராய்ந்து   எந்தப்   பக்கமும்  சாயாமல்
நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.