வெருவந்த செய்யாமை
570கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.

கொடுங்கோல் அரசு  படிக்காதவர்களைத்  தனக்குப்  பக்க பலமாக்கிக்
கொள்ளும், அதைப்போல் பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.