ஒற்றாடல்
585கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று.

சந்தேகப்பட   முடியாத    தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப்
பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில்  உள்ளதை
வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.