ஒற்றாடல்
588ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
ரொற்றினா லொற்றிக் கொளல்.

ஓர் உளவாளி, தனது திறமையினால்  அறிந்து  சொல்லும்  செய்தியைக்
கூட   மற்றோர்   உளவாளி   வாயிலாகவும்  அறிந்து வரச் செய்து, இரு
செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே  அது,  உண்மையா  அல்லவா
என்ற முடிவுக்கு வரவேண்டும்.