ஒற்றாடல்
589ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.

ஓர்  ஒற்றரை  மற்றோர்  ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை
இயங்கவைத்து  அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக்
கொள்ளலாம்.