ஊக்கமுடைமை
597சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி
தளராமல்    இருப்பதுபோல,  ஊக்கமுடையவர்கள்,  அழிவே  வந்தாலும்
அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.