இடுக்கணழியாமை
629இன்பத்து ளின்பம்விழையாதான் றுன்பத்துட்
டுன்ப முறுத லிலன்.

இன்பம்  வரும்  பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம்
வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள்.  இரண்டையும்
ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.