சொல்வன்மை
646வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற்பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்.

மற்றவர்கள்    விரும்பிக்   கேட்டு   உணரும்படியாகக் கருத்துகளைச்
சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின்  பயனை  ஆராய்ந்து  ஏற்றுக்
கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.