வினைசெயல்வகை
676முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

ஈடுபடக்கூடிய  ஒரு  செயலால்  எதிர்பார்க்கப்படும்  பயன், அதற்கான
முயற்சிக்கு  இடையே   வரும்   தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை
ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.