மன்னரைச் சேர்ந்தொழுகல்
696குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

ஒருவரின்   மனநிலை  எவ்வாறு  உள்ளது   என்பதை அறிந்து, தக்க
காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்  குரியவைகளை  விலக்கி, விரும்பத்
தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.