அன்புடைமை
71அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புல்கணீர் பூச றரும்.

உள்ளத்தில் இருக்கும்  அன்பைத்   தாழ்ப்பாள்   போட்டு  அடைத்து
வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து,  கண்ணீர்த்துளி
வாயிலாக அது வெளிப்பட்டு விடும்.