பொருள் செயல்வகை
757அருளென்னு மன்பீன்குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு.

அன்பு  என்கிற  அன்னை  பெற்றெடுக்கும்  அருள் என்கிற குழந்தை,
பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.