படைமாட்சி
762உலைவிடத் தூறஞ்சா வன்கண்தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது.

போரில்    சேதமுற்று     வலிமை     குன்றியபோதும்,     எவ்வித
இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு
அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.