படைச்செருக்கு
776விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து.

ஒரு  வீரன்,  தான்  வாழ்ந்த  நாட்களைக்  கணக்குப்  பார்த்து அந்த
நாட்களில்  தன்னுடலில்  விழுப்புண்படாத  நாட்களையெல்லாம்  வீணான
நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.