பழைமை
804விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

பழகிய  நட்பின்   உரிமை  காரணமாகத்   தமது  நண்பர்   தம்மைக்
கேளாமலே ஒரு  செயல்  புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர்
அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.