கூடாநட்பு
828தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா
ரழுதகண் ணீரு மனைத்து.

பகைவர்கள்  வணங்குகின்ற   போதுகூட  அவர்களின்   கைக்குள்ளே
கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே,  அவர்களின், கண்ணீர் கொட்டி
அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.