பேதைமை
831பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண்டு
ஊதியம் போக விடல்.

கேடு   விளைவிப்பது   எது?   நன்மை   தருவது    எது?   என்று
தெளிவடையாமல்  நன்மையை  விடுத்துத்  தீமையை நாடுவதே பேதைமை
என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.