பேதைமை
837ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை.

அறிவில்லாப்  பேதைகளிடம்  குவியும்  செல்வம்,  அயலார்  சுருட்டிக்
கொள்ளப்      பயன்படுமேயல்லாமல்,     பசித்திருக்கும்     பாசமுள்ள
சுற்றத்தாருக்குப் பயன்படாது.