புல்லறிவாண்மை
849காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

அறிவற்ற  ஒருவன்,  தான்  அறிந்ததை  மட்டும்  வைத்துக் கொண்டு,
தன்னை   அறிவுடையவனாகக்     காட்டிக்    கொள்வான்.    அவனை
உண்மையிலேயே  அறிவுடையவனாக்க   முயற்சி  செய்பவன்  தன்னையே
அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.