குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பகைத்திறந் தெரிதல்
873
ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம்
பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.