உட்பகை
890உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று.

உள்ளத்தால்  ஒன்றுபடாதவர்கள்  கூடிவாழ்வது  என்பது  ஒரு  சிறிய
குடிலுக்குள் பாம்புடன்  இருப்பது  போன்று  ஒவ்வொரு நொடியும் அச்சம்
தருவதாகும்.