பெரியாரைப் பிழையாமை
891ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாந் தலை.

ஒரு  செயலைச்  செய்து  முடிக்க  வல்லவரின்  ஆற்றலை   இகழாது
இருந்தால்,  அதுவே தம்மைக் காத்திடும்  காவல்கள் அனைத்தையும் விடச்
சிறந்த காவலாக அமையும்.