குறள் முதற்குறிப்பு அகரவரிசை
இனியவை கூறல்
92
அகனமர்ந் தீதலி னன்றே முகனமர்ந்
தின்சொல னாகப் பெறின்.
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக்
கொடுப்பதை விட மேலான பண்பாகும்.