மானம்
969மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
ருயிர்நீப்பர் மானம் வரின்.

உடலில்  உள்ள  உரோமம்  நீக்கப்பட்டால்  உயிர் வாழாது கவரிமான்
என்பார்கள்.  அதுபோல்  மானம்  அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள்
உயிரையே விட்டு விடுவார்கள்.