1. அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்திய
தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும், சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும்,-இம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.
உரை
   
2. தம் குணம் குன்றாத் தகைமையும், தா இல் சீர்
இன் குணத்தார் ஏவின செய்தலும், நன்கு உணர்வின்
நான்மறையாளர் வழிச் செலவும்,-இம் மூன்றும்
மேல் முறையாளர் தொழில்.
உரை
   
3. கல்லார்க்கு இனனா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும்,-இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு.
உரை
   
4. பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற
பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்
காய்வானைக் கை வாங்கிக் கோடலும்,-இம் மூன்றும்
சாவ உறுவான் தொழில்.
உரை
   
5. வழங்காத் துறை இழிந்து நீர்ப் போக்கும், ஒப்ப
விழைவு இலாப் பெண்டிர் தோள் சேர்வும், உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலும்,-இம் மூன்றும்
அருந் துயரம் காட்டும் நெறி.
உரை
   
6. பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும்,-இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.
உரை
   
7. வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்
செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும்,-இம் மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா.
உரை
   
8. தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும்,-இம் மூன்றும்
தாம் தம்மைக் கூறாப் பொருள்.
உரை
   
9. பெருமை உடையார் இனத்தின் அகறல்,
உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,
விழுமிய அல்ல துணிதல்,-இம் மூன்றும்
முழுமக்கள் காதலவை.
உரை
   
10. கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக் களனும், பாத்து உண்ணாத்
தன்மையிலாளர் அயல் இருப்பும்,-இம் மூன்றும்
நன்மை பயத்தல் இல.
உரை