21. வருவாயுள் கால் வழங்கி வாழ்தல், செரு வாய்ப்பச்
செய்தமை நாடாச் சிறப்புடைமை, எய்தப்
பல நாடி நல்லவை கற்றல்,-இம் மூன்றும்
நல மாட்சி நல்லவர் கோள்.
உரை
   
22. பற்று என்னும் பாசத் தளையும், பல வழியும்
பற்று அறாது ஓடும் அவாத் தேரும், தெற்றெனப்
பொய்த்துரை என்னும் புகை இருளும்,-இம் மூன்றும்
வித்து; அற, வீடும் பிறப்பு.
உரை
   
23. தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தால்
குற்றம் கடிந்த ஒழுக்கமும், தெற்றெனப்
பல் பொருள் நீங்கிய சிந்தையும்,-இம் மூன்றும்
நல் வினை ஆர்க்கும் கயிறு.
உரை
   
24. காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொல்லும்,
தூண்டிலினுள் பொதிந்த தேரையும், மாண்ட சீர்,
காழ்த்த பகைவர் வணக்கமும்,-இம் மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும், அளறு.
உரை
   
25. செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்து அகன்ற
அல்குல் விலை பகரும் ஆய்தொடியும், நல்லவர்க்கு
வைத்த அறப்புறம் கொண்டானும்,-இம் மூவர்
கைத்து உண்ணார், கற்றறிந்தார்.
உரை
   
26. ஒல்வது அறியும் விருந்தினனும், ஆர் உயிரைக்
கொல்வது இடை நீக்கி வாழ்வானும், வல்லிதின்
சீலம் இனிது உடைய ஆசானும்,-இம் மூவர்
ஞாலம் எனப் படுவார்.
உரை
   
27. உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும்
பால் பற்றிச் சொல்லா விடுதலும், தோல் வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை,-இம் மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்.
உரை
   
28. வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும்
இல்லது காமுற்று இருப்பானும், கல்விச்
செவிக் குற்றம் பார்த்திருப்பானும்,-இம் மூவர்
உமிக் குற்றுக் கை வருந்துவார்.
உரை
   
29. பெண் விழைந்து பின் செலினும், தன் செலவில் குன்றாமை;
கண் விழைந்து கையுறினும், காதல் பொருட்கு இன்மை;
மண் விழைந்து, வாழ் நாள் மதியாமை;-இம் மூன்றும்
நுண் விழைந்த நூலவர் நோக்கு.
உரை
   
30. தன் நச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும்,
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்,
என்றும் அழுக்காறு இகந்தானும்,-இம் மூவர்
நின்ற புகழ் உடையார்.
உரை