31. பல்லவையுள் நல்லவை கற்றலும்; பாத்து உண்டு ஆங்கு
இல்லறம் முட்டாது இயற்றலும், வல்லிதின்
தாளின் ஒரு பொருள் ஆக்கலும்,-இம் மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை.
உரை
   
32. நுண் மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா
வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல் மொழியைச்
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும்,-இம் மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன்.
உரை
   
33. கோல் அஞ்சி வாழும் குடியும், குடி தழீஇ
ஆலம் வீழ் போலும் அமைச்சனும், வேலின்
கடை மணிபோல் திண்ணியான் காப்பும்,-இம் மூன்றும்
படை வேந்தன் பற்று விடல்!
உரை
   
34. மூன்று கடன் கழித்த பார்ப்பானும், ஓர்ந்து
முறை நிலை கோடா அரசும், சிறைநின்று
அலவலை அல்லாக் குடியும்,-இம் மூவர்
உலகம் எனப்படுவார்.
உரை
   
35. முந்நீர்த் திரையின் எழுந்து இயங்கா மேதையும்,
நுண் நூல் பெருங் கேள்வி நூல் கரை கண்டானும்,
மைந் நீர்மை இன்றி மயல் அறுப்பான்,-இம் மூவர்
மெய்ந் நீர்மைமேல் நிற்பவர்.
உரை
   
36. ஊன் உண்டு, ‘உயிர்கட்கு அருளுடையெம்!’ என்பானும்,
‘தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும்’ என்பானும்,
காமுறு வேள்வியில் கொல்வானும்,-இம் மூவர்
தாம் அறிவர், தாம் கண்டவாறு.
உரை
   
37. குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய
சால்பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும்
தூய்மையுள் தோன்றும் பிரமாணம்;-இம் மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு.
உரை
   
38. தன்னை வியந்து தருக்கலும், தாழ்வு இன்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னிய
பல் பொருள் வெஃகும் சிறுமையும்,-இம் மூன்றும்
செல்வம் உடைக்கும் படை.
உரை
   
39. புலை மயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல்,
கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல்,-இம் மூன்றும்
நன்மை இலாளர் தொழில்.
உரை
   
40. வெகுளி நுணுக்கும் விறலும், மகளிர்கட்கு
ஒத்த ஒழுக்கம் உடைமையும், பாத்து உண்ணும்
நல் அறிவாண்மை தலைப்படலும்,-இம் மூன்றும்
தொல் அறிவாளர் தொழில்.
உரை