தொடக்கம் |
|
|
41. | அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும், துளங்கினும் தன் குடிமை குன்றாத் தகைமையும், அன்பு ஓடி நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும்,-இம் மூன்றும் கேள்வியுள் எல்லாம் தலை. | |
|
உரை
|
|
|
|
|
42. | கழகத்தால் வந்த பொருள் காமுறாமை, பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல், உழவின்கண் காமுற்று வாழ்தல்,-இம் மூன்றும் அழகு என்ப வேளாண் குடிக்கு. | |
|
உரை
|
|
|
|
|
43. | வாயின் அடங்குதல் துப்புரவு ஆம்; மாசு அற்ற செய்கை அடங்குதல் திப்பியம் ஆம்; பொய் இன்றி நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும்;-இம் மூன்றும் வஞ்சத்தின் தீர்ந்த பொருள். | |
|
உரை
|
|
|
|
|
44. | விருந்து இன்றி உண்ட பகலும், திருந்திழையார் புல்லப் புடை பெயராக் கங்குலும், இல்லார்க்கு ஒன்று ஈயாது ஒழிந்தகன்ற காலையும்,-இம் மூன்றும் நோயே, உரன் உடையார்க்கு. | |
|
உரை
|
|
|
|
|
45. | ஆற்றானை, ‘ஆற்று’ என்று அலைப்பானும்; அன்பு இன்றி, ஏற்றார்க்கு, இயைவ கரப்பானும்; கூற்றம் வரவு உண்மை சிந்தியாதானும்;-இம் மூவர் நிரயத்துச் சென்று வீழ்வார். | |
|
உரை
|
|
|
|
|
46. | கால் தூய்மை இல்லாக் கலி மாவும், காழ் கடிந்து மேல் தூய்மை இல்லாத வெங் களிறும், சீறிக் கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி,-இம் மூன்றும் குறுகார், அறிவுடையார். | |
|
உரை
|
|
|
|
|
47. | சில் சொல், பெருந் தோள், மகளிரும்; பல் வகையும் தாளினால் தந்த விழு நிதியும்; நாள்தொறும் நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்;-இம் மூன்றும் காப்பு இகழல் ஆகாப் பொருள். | |
|
உரை
|
|
|
|
|
48. | வைததனை இன் சொல்லாக் கொள்வானும், நெய் பெய்த சோறு என்று கூழை மதிப்பானும், ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும்,-இம் மூவர் மெய்ப் பொருள் கண்டு வாழ்வார். | |
|
உரை
|
|
|
|
|
49. | ஏவியது மாற்றும் இளங் கிளையும், காவாது வைது எள்ளிச் சொல்லும் தலைமகனும், பொய் தெள்ளி அம் மனை தேய்க்கும் மனையாளும்,-இம் மூவர் இம்மைக்கு உறுதி இலார். | |
|
உரை
|
|
|
|
|
50. | கொள் பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும், உள் பொருள் சொல்லாச் சல மொழி மாந்தரும், இல் இருந்து எல்லை கடப்பாளும்,-இம் மூவர் வல்லே மழை அருக்கும் கோள். | |
|
உரை
|
|
|
|