51. தூர்ந்து ஒழுகிக்கண்ணும், துணைகள் துணைகளே;
சார்ந்து ஒழுகிக்கண்ணும்; சலவர் சலவரே;
ஈர்ந்த கல் இன்னார் கயவர்;-இவர் மூவர்,
தேர்ந்தக்கால், தோன்றும் பொருள்.
உரை
   
52. கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்; காமுற்ற
பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை; நண்ணும்
மறுமைக்கு அணிகலம் கல்வி;-இம் மூன்றும்
குறியுடையார் கண்ணே உள.
உரை
   
53. குருடன் மனையாள் அழகும், இருள் தீரக்
கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும், பற்றிய
பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும்,-இம் மூன்றும்
எண்ணின், தெரியாப் பொருள்.
உரை
   
54. தன் பயம் தூக்காரைச் சார்தலும், தான் பயவா
நன் பயம் காய்வின்கண் கூறலும், பின் பயவாக்
குற்றம் பிறர் மேல் உரைத்தலும்,-இம் மூன்றும்
தெற்றெனவு இல்லார் தொழில்.
உரை
   
55. அரு மறை காவாத நட்பும், பெருமையை
வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும், யாண்டானும்
செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும்,-இம் மூவர்
ஒற்றாள் எனப்படுவார்.
உரை
   
56. முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து, பிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு, வந்த
ஒழுக்கம் பெரு நெறி சேர்தல்,-இம் மூன்றும்
விழுப்ப நெறி தூராவாறு.
உரை
   
57. கொட்டி அளந்து அமையாப் பாடலும், தட்டித்துப்
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும், துச்சிருந்தான்
நாளும் கலாம் காமுறுதலும்,-இம் மூன்றும்
கேள்வியுள் இன்னாதன.
உரை
   
58. பழமையை நோக்கி, அளித்தல், கிழமையால்
கேளிர் உவப்பத் தழுவுதல், கேளிராத்
துன்னிய சொல்லால் இனம் திரட்டல்,-இம் மூன்றும்
மன்னற்கு இளையான் தொழில்.
உரை
   
59. கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங் கூழ்
விளைவின் கண் போற்றான் உழவும், இளையனாய்க்
கள் உண்டு வாழ்வான் குடிமையும்,-இம் மூன்றும்
உள்ளன போலக் கெடும்.
உரை
   
60. பேஎய்ப் பிறப்பில் பெரும் பசியும், பாஅய்
விலங்கின் பிறப்பின் வெரூஉம், புலம் தெரியா
மக்கட் பிறப்பின் நிரப்பு இடும்பை,-இம் மூன்றும்
துக்கப் பிறப்பாய்விடும்.
உரை