தொடக்கம் |
|
|
61. | ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல், எய்துவது எய்தாமை முன் காத்தல், வைகலும் மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல்,-இம் மூன்றும் வீறு சால் பேர் அமைச்சர் கோள். | |
|
உரை
|
|
|
|
|
62. | நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன் மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி வைத்த அடைக்கலம் கொள்வானும்,-இம் மூவர் எச்சம் இழந்து வாழ்வார். | |
|
உரை
|
|
|
|
|
63. | நேர்வு அஞ்சாதாரொடு நட்பும், விருந்து அஞ்சும் ஈர்வளையை இல்லத்து இருத்தலும், சீர் பயவாத் தன்மையிலாளர் அயல் இருப்பும்,-இம் மூன்றும் நன்மை பயத்தல் இல. | |
|
உரை
|
|
|
|
|
64. | நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும் இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின் மக்கள் பெறலின், மனைக் கிழத்தி;-இம் மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். | |
|
உரை
|
|
|
|
|
65. | அச்சம் அலை கடலின் தோன்றலும், ஆர்வு உற்ற விட்டகலகில்லாத வேட்கையும், கட்டிய மெய்ந் நிலை காணா வெகுளியும்,-இம் மூன்றும் தம் நெய்யில் தாம் பொரியுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
66. | கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும் சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றிய கோல் கோடி வாழும் அரசும்,-இவை மூன்றும் சால்போடு பட்டது இல. | |
|
உரை
|
|
|
|
|
67. | எதிர்நிற்கும் பெண்ணும், இயல்பு இல் தொழும்பும், செயிர் நிற்கும் சுற்றமும், ஆகி, மயிர் நரைப்ப, முந்தைப் பழ வினையாய்த் தின்னும்;-இவை மூன்றும் நொந்தார் செயக் கிடந்தது இல். | |
|
உரை
|
|
|
|
|
68. | இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ் உலகின் நில்லாமை உள்ளும் நெறிப்பாடும், எவ் உயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும்,-இம் மூன்றும் நன்று அறியும் மாந்தர்க்கு உள. | |
|
உரை
|
|
|
|
|
69. | அருந் தொழில் ஆற்றும் பகடும், திருந்திய மெய்ந் நிறைந்து நீடு இருந்த கன்னியும், நொந்து நெறி மாறி வந்த விருந்தும்,-இம் மூன்றும் பெறுமாறு அரிய பொருள். | |
|
உரை
|
|
|
|
|
70. | காவோடு அறக் குளம் தொட்டானும், நாவினால் வேதம் கரை கண்ட பார்ப்பானும், தீது இகந்து ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும்,-இம் மூவர் செல்வர் எனப்படுவார். | |
|
உரை
|
|
|
|