தொடக்கம் |
|
|
71. | உடுத்தாடை இல்லாது நீராட்டும், பெண்டிர் தொடுத்தாண்டு அவைப் போர் புகலும், கொடுத்து அளிக்கும் ஆண்மை உடையவர் நல்குரவும்,-இம் மூன்றும் காண அரிய, என் கண். | |
|
உரை
|
|
|
|
|
72. | நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்; அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும்; மறவனை எவ் உயிரும் அஞ்சும்;-இம் மூன்றும் திறவதின் தீர்ந்த பொருள். | |
|
உரை
|
|
|
|
|
73. | ‘இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல்!’ என்பானும், பரந்து ஒழுகும் பெண்பாலைப் பாசம் என்பானும், விரி கடலூடு செல்வானும்,-இம் மூவர் அரிய துணிந்து ஒழுகுவார். | |
|
உரை
|
|
|
|
|
74. | கொலைநின்று தின்று ஒழுகுவானும், பெரியவர் புல்லுங்கால் தான் புல்லும் பேதையும், ‘இல் எனக்கு ஒன்று; ஈக!’ என்பவனை நகுவானும்,-இம் மூவர் யாதும் கடைப்பிடியாதார். | |
|
உரை
|
|
|
|
|
75. | வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும், உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூலும், புணர்வின்கண் தக்கது அறியும் தலைமகனும்,-இம் மூவர் பொத்து இன்றிக் காழ்த்த மரம். | |
|
உரை
|
|
|
|
|
76. | மாரி நாள் வந்த விருந்தும், மனம் பிறிதாக் காரியத்தில் குன்றாக் கணிகையும், வீரியத்து மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும்,-இம் மூவர் போற்றற்கு அரியார், புரிந்து. | |
|
உரை
|
|
|
|
|
77. | கயவரைக் கையிகந்து வாழ்தல், நயவரை நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல், தெள்ளி வடுவான வாராமல் காத்தல்,-இம் மூன்றும் குடி மாசு இலார்க்கே உள. | |
|
உரை
|
|
|
|
|
78. | தூய்மை உடைமை துணிவு ஆம்; தொழில் அகற்று வாய்மை உடைமை வனப்பு ஆகும்; தீமை மனத்தினும் வாயினும் சொல்லாமை;-மூன்றும் தவத்தின் தருக்கினார் கோள். | |
|
உரை
|
|
|
|
|
79. | பழி அஞ்சான் வாழும் பசுவும், அழிவினால் கொண்ட அருந் தவம் விட்டானும், கொண்டிருந்து இல் அஞ்சி வாழும் எருதும்,-இவர் மூவர் நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய். | |
|
உரை
|
|
|
|
|
80. | முறை செய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சின் நிறை இல்லான் கொண்ட தவமும், நிறை ஒழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பும்,-இவை மூன்றும் தூற்றின்கண் தூவிய வித்து. | |
|
உரை
|
|
|
|