தொடக்கம் |
|
|
81. | தோள் வழங்கி வாழும் துறைபோல் கணிகையும், நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும், வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும்,-இம் மூவர் ஆசைக் கடலுள் ஆழ்வார். | |
|
உரை
|
|
|
|
|
82. | சான்றாருள் சான்றான் எனப்படுதல், எஞ் ஞான்றும் தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல், பாய்ந்து எழுந்து கொள்ளாருள் கொள்ளாத கூறாமை,-இம் மூன்றும் நல் ஆள் வழங்கும் நெறி. | |
|
உரை
|
|
|
|
|
83. | உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்; நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்; செப்பம் உடையார் மழை அனையர்;-இம் மூன்றும் செப்ப நெறி தூராவாறு. | |
|
உரை
|
|
|
|
|
84. | வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத் தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின் கல்வி மாண்பு இல்லாத மாந்தரும்,-இம் மூவர் நல்குரவு சேரப்பட்டார். | |
|
உரை
|
|
|
|
|
85. | எள்ளப்படும் மரபிற்று ஆகலும், உள் பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும், முட்டு இன்றி உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும்,-இம் மூன்றும் ஒள்ளிய ஒற்றாள் குணம். | |
|
உரை
|
|
|
|
|
86. | அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல், கற்புப் பெரும் புணை காதலின் கைவிடுதல், நட்பின் நய நீர்மை நீங்கல்,-இவை மூன்றும் குற்றம் தரூஉம் பகை. | |
|
உரை
|
|
|
|
|
87. | கொல்வது தான் அஞ்சான் வேண்டலும், கல்விக்கு அகன்ற இனம் புகுவானும், இருந்து விழு நிதி குன்றுவிப்பானும்,-இம் மூவர் முழுமக்கள் ஆகற்பாலார். | |
|
உரை
|
|
|
|
|
88. | பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும், தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும், பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல்,-இம் மூன்றும் புணை இல் நிலை கலக்குமாறு. | |
|
உரை
|
|
|
|
|
89. | அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும், பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும், இறந்து இன்னா சொல்லகிற்பானும்,-இம் மூவர் பிறந்தும் பிறந்திலாதார். | |
|
உரை
|
|
|
|
|
90. | ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும் அருள் புரிந்து சொல்லுக, சொல்லை!-இம் மூன்றும் இருள் உலகம் சேராத ஆறு. | |
|
உரை
|
|
|
|