81. தோள் வழங்கி வாழும் துறைபோல் கணிகையும்,
நாள் கழகம் பார்க்கும் நயம் இலாச் சூதனும்,
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும்,-இம் மூவர்
ஆசைக் கடலுள் ஆழ்வார்.
உரை
   
82. சான்றாருள் சான்றான் எனப்படுதல், எஞ் ஞான்றும்
தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல், பாய்ந்து எழுந்து
கொள்ளாருள் கொள்ளாத கூறாமை,-இம் மூன்றும்
நல் ஆள் வழங்கும் நெறி.
உரை
   
83. உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்;
நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்;
செப்பம் உடையார் மழை அனையர்;-இம் மூன்றும்
செப்ப நெறி தூராவாறு.
உரை
   
84. வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத்
தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின்
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும்,-இம் மூவர்
நல்குரவு சேரப்பட்டார்.
உரை
   
85. எள்ளப்படும் மரபிற்று ஆகலும், உள் பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும், முட்டு இன்றி
உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும்,-இம் மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம்.
உரை
   
86. அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்,
கற்புப் பெரும் புணை காதலின் கைவிடுதல்,
நட்பின் நய நீர்மை நீங்கல்,-இவை மூன்றும்
குற்றம் தரூஉம் பகை.
உரை
   
87. கொல்வது தான் அஞ்சான் வேண்டலும், கல்விக்கு
அகன்ற இனம் புகுவானும், இருந்து
விழு நிதி குன்றுவிப்பானும்,-இம் மூவர்
முழுமக்கள் ஆகற்பாலார்.
உரை
   
88. பிணி தன்னைத் தின்னுங்கால் தான் வருந்துமாறும்,
தணிவு இல் பெருங் கூற்று உயிர் உண்ணுமாறும்,
பிணைச் செல்வம் மாண்பு இன்று இயங்கல்,-இம் மூன்றும்
புணை இல் நிலை கலக்குமாறு.
உரை
   
89. அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும்,
பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,
இறந்து இன்னா சொல்லகிற்பானும்,-இம் மூவர்
பிறந்தும் பிறந்திலாதார்.
உரை
   
90. ஈதற்குச் செய்க, பொருளை! அற நெறி
சேர்தற்குச் செய்க, பெரு நூலை! யாதும்
அருள் புரிந்து சொல்லுக, சொல்லை!-இம் மூன்றும்
இருள் உலகம் சேராத ஆறு.
உரை