5. அல்ல பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
உரை
2. தாரம் மாணாதது வாழ்க்கை அன்று.
உரை
3. ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று.
உரை
4. சோரக் கையன் சொல்மலை அல்லன்.
உரை
5. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்.
உரை
6. தேராமல் கற்றது கல்வி அன்று.
உரை
7. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று.
உரை
8. அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று.
உரை
9. திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று.
உரை
10. மறு பிறப்பு அறியாதது மூப்பு அன்று.
உரை