| தொடக்கம் |
|
|
|
|
| 1. | ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்- மக்கட் பேற்றின் பெறும் பேறு இல்லை. | |
|
உரை
|
|
|
| 2. | ஒப்புரவு அறிதலின் தகு வரவு இல்லை. | |
|
உரை
|
|
|
| 3. | வாய்ப்புடை வழக்கின் நல் வழக்கு இல்லை. | |
|
உரை
|
|
|
| 4. | வாயா வழக்கின் தீ வழக்கு இல்லை. | |
|
உரை
|
|
|
| 5. | இயைவது கரத்தலின் கொடுமை இல்லை. | |
|
உரை
|
|
|
| 6. | உரை இலன் ஆதலின் சாக்காடு இல்லை. | |
|
உரை
|
|
|
| 7. | நசையின் பெரியது ஓர் நல்குரவு இல்லை. | |
|
உரை
|
|
|
| 8. | இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை. | |
|
உரை
|
|
|
| 9. | இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை. | |
|
உரை
|
|
|
| 10. | இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை. | |
|
உரை
|