(ப-பொ.) மறுபிறப்பை யறிந்துஅறத்தின்வழி ஒழுகாதே மூத்த மூப்பு மூப்பன்று. (ப-ரை.) மறுபிறப்பு - மறுபிறப்பு நன்கு நடத்தற்குரிய வொழுக்கங்களை, அறியாதது - ஒருவன் அறியாமலே அடைந்த மூப்பானது, மூப்பு அன்று -மூப்பு என்னும் கணக்கிலே சேர்ந்ததாகாது. "இறந்த பிறப்பிற்றாஞ் செய்தவினையைப் பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து செய்யும் வினையா லறிக இனிப்பிறந் தெய்தும் வினையின் பயன்.' 'அம்மைத் தாஞ்செய்த அறத்தின் வருபயனை இம்மைத்துய்த் தின்புறா நின்றவர் - உம்மைக் கறஞ்செய்யா தைம்புலனும் ஆற்றுதல் நல்லாக் கறந்துண்டஃ தோம்பாமை யாம்.' இவ்வறநெறிச்சார வெண்பாக்களால் கருத்து நன்கு விளங்கும்.
|