10மறுபிறப் பறியா ததுமூப் பன்று.

(ப-பொ.) மறுபிறப்பை யறிந்துஅறத்தின்வழி ஒழுகாதே மூத்த மூப்பு மூப்பன்று.

(ப-ரை.) மறுபிறப்பு - மறுபிறப்பு நன்கு நடத்தற்குரிய வொழுக்கங்களை, அறியாதது - ஒருவன் அறியாமலே அடைந்த மூப்பானது, மூப்பு அன்று -மூப்பு என்னும் கணக்கிலே சேர்ந்ததாகாது.

"இறந்த பிறப்பிற்றாஞ் செய்தவினையைப்
பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து
செய்யும் வினையா லறிக இனிப்பிறந்
தெய்தும் வினையின் பயன்.'

'அம்மைத் தாஞ்செய்த அறத்தின் வருபயனை
இம்மைத்துய்த் தின்புறா நின்றவர் - உம்மைக்
கறஞ்செய்யா தைம்புலனும் ஆற்றுதல் நல்லாக்
கறந்துண்டஃ தோம்பாமை யாம்.'

இவ்வறநெறிச்சார வெண்பாக்களால் கருத்து நன்கு விளங்கும்.